Monday, November 24, 2008

ரசிகர்கள் உண்ணாவிரதம்!


மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!


இலங்கையில் தமிழர்கள் காயம்பட்டு துடிக்கும் இந்த தருணத்தில் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். எனது இந்த அறிவிப்பு அவர்களது அமைதி முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்', என சூப்பர் ஸ்டார் ரஜினி விடுத்த செய்தியின் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.இப்போதே பல ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் பிறந்த நாளன்று இலங்கை மக்களின் துயர் துடைக்கும் விதத்திலும், அவர்களுக்கு மன ஆறுதல் தரும் விதத்திலும் என்னென்ன செய்யலாம் என ஆலோசித்த வருகிறார்கள்.முதல்கட்டமாக மதுரை மாவட்ட ரசிகர்கள் ரஜினியின் பிறந்த நாள் செய்தியை அர்த்தமுள்ளதாக்கும் விதத்தில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.இது குறித்து மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ரபீக், பாண்டியன், பால தம்புராஜ், சோலைராஜா ஆகியோர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஈழத் தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டிருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளை நாங்கள் முழுவதுமாக ஏற்கிறோம். தலைவரின் இந்த வார்த்தைகளை அர்த்தமுள்ளதைக்கும் விதத்தில் ரசிகர்களான நாங்களும் நடந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.எனவே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி உண்ணா விரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண உதவி பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளோம், என்றார்.

No comments: