Tuesday, December 9, 2008

இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?











இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?

இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா... சாட்சாத் நம்ம தலைவர்தான்!பின்னே உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா தொடங்கி நம்ம உள்ளூர் இளம் ஸ்டார் விஜயலட்சுமி வரை தலைவர் புகழ் பாடினால், இவர்கள் என்னதான் செய்வார்கள்...!அரசியல் என்றாலும் அவர்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்... திரையிலோ முடிசூடா முதல்வர் அவர்தான், முப்பது ஆண்டுகளாய்... யார் வாய் திறந்தாலும் சூப்பர் ஸ்டார் புகழைத்தான் பாடுகிறார்கள்!இவர்கள் பேசாமல் அமைதியாக, வந்த வாய்ப்புகளைக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக கோலோச்சிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி அமைதி காத்தாரே... அப்படி! திரையுலகில் நம் தலைவர் விரும்பும்வரை அவர்தான் முதல்வர்!!மேட்டருக்கு வருவோம்...பாலிவுட்டைப் பொறுத்தவரை, வெற்றிகரமான ஒரே தென்னிந்திய ஹீரோ நம்ம சூப்பர்ஸ்டார் மட்டும்தான். பொதுவாக அங்கெல்லாம் தென்னிந்திய நடிகர்களுக்கு பெரிய மரியாதை கிடையாது.இங்கே பெரிய‌ நடிகன் என்று புகழப்பட்டாலும் அவர்கள் துணை நடிகர் ரேஞ்சுக்குத்தான் நடத்துவார்கள். திறமையிருந்தால் ஜெயிக்கலாம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல்கள்.ஆனால் தலைவர் விஷயம் அப்படியல்ல... அவரது வசீகரமும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும் மேனரிஸமும் (Charisma and Mass Appeal) எல்லாவற்றுக்கும் மேல் எவரையும் வெல்லும் அவரது இனிய சுபாவமும்... எல்லைகளைக் கடந்தும் அவர் மேல் மக்களைக் காதல் கொள்ள வைத்துள்ளது!இன்றுதான் இந்த நிலை அல்ல... ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு பன்மொழிக் கலைஞனாக, பல மொழி பேசும் மக்களும் நேசிக்கும் நல்ல நடிகராகத் திகழ்கிறார் ரஜினி.முன்பு ஒரு முறை நடிகை ரதி ஸ்டார்டஸ்ட்-டுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி ஒரு நிஜமான கண்ணியவான்... அவருக்கு இணையான நடிகர் இந்த துணைக் கண்டத்தில் யாருமில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.ரஜினியுடன் நடித்த ஹேமமாலினி மற்றும் ஜெயப்ரதா இருவருமே அவரை பல பேட்டிகளில் மனதாரப் புகழ்ந்துள்ளனர்.சமூத்தில்கூட எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் ரஜினியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு வட இந்திய மீடியாவுக்கு அளித்த பேட்டி உலக அளவில் பேசப்பட்டது. அதில், 'உலக அளவில் ரஜினியைப் போன்ற ஒரு நடிகரைப் பார்ப்பது அரிது என்றும், ஒரு நடிகன் என்பதற்கு முழு அர்த்தம் ரஜினிதான்', என்றும் குறிப்பிட்டிருந்தார்.சில வருடங்களுக்கு முன், ரஜினி குறித்து ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அன்றைய பாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் இப்படிச் சொல்லியிருப்பார்:கேள்வி: அத்தனை நட்சத்திரங்களுக்கும் ரஜினி, கமலோடு நடிப்பது ஒரு லட்சியமாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி..?பதில்: பின்னே… ரஜினியோடு நான் ‘உத்தர்தக்ஷின்’ படம் நடித்திருக்கிறேன். இன்னும் கமலோடு நடிக்கவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா… கமல் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், ஐ லவ் ரஜினி!இது, மாதுரி அன்று...இன்னொரு நடிகை தலைவரைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார், இன்று:கேள்வி: உங்கள் ஆசை என்ன?பதில்: எப்படியாவது ரஜினி சாரோட ஒரு படத்துல நடிக்கணும். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால் அவர் பேசுவதைக் கேட்கும்போது, அவரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்கும்போது, என்னையும் மீறி அவர் மேல் தனி மரியாதையும் ஒருவித உரிமை கலந்த பற்றுதலும் வந்துவிட்டது.இந்த அளவு மீடியாவை ஆதிக்கம் செலுத்தும் ஒருவரை நான் வேறு எந்த நாட்டிலும் கேள்விப்பட்டது கூட இல்லை. அவருடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்... ரோபோ (எந்திரன்) படத்துக்காக என் பெயர் பேசப்பட்டதே பெரிய விஷயம்தான்...”-பாலிவுட்டில் இன்றைக்கு ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்குப் பேசப்படும் நடிகை தீபிகா படுகோன், தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில்!

Thursday, December 4, 2008

ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!


ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!


ரிஸ்க் எடுப்பதில் ரஜினிக்கு எப்போதுமே அலாதி ஆர்வம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரைப் போல உண்மையான ஈடுபாடு கொண்ட கலைஞர்களைப் பார்ப்பது அரிது என்கிறார் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.சிவாஜியில் ரஜினியின் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றியவர் பீட்டர் ஹெய்ன். வியட்நாமில் ஒரு காராத்தே பயிற்சியாளரின் மகனாய் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டவர் பீட்டர். இவரது தந்தை வழி மூதாதையர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். குங்ஃபு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.சமீபத்தில் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.“அவருடன் நான் பணியாற்றிய ஒரே படம் சிவாஜிதான். ஆனால் என் ஆயுசுக்கும் பெருமை சேர்க்கும் படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.இந்தப் படத்தில் பணியாற்றிய போது என் மீது ரஜினி சார் கோபித்துக் கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.அதில் துளியும் உண்மையில்லை.சார் என்னிடம் எப்போதும் சொல்வது, ‘கண்ணா... ஸேப்டி பர்ஸ்ட்!’ அதன்படிதான் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் போதிய பாதுகாப்பு ஏற்படுகளுடன் ஸ்டன்ட் காட்சி அமைக்கப்பட்டது. ரஜினி சாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு இணையாக மற்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது. இன்னொன்று, மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் போலத்தான் நானும் நடந்து கொண்டேன்.அப்படியும் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. ரஜினி சாரின் முன்னெச்சரிக்கைக்கு அர்த்தம் புரிந்து, முன்னிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டேன். இப்போதும் அதைக் கடைப் பிடிக்கிறேன். இந்தியில் ஆமிர்கானுடன் கஜினி படம் பண்ணும்போது கூட, சிவாஜியில் ரஜினி சார் சொன்ன அறிவுரைகள்தான் என் மனதுக்குள் ஓடின...இதோ இப்போது நானும் ஒரு இயக்குநராக மாறியிருக்கிறேன். ஒரு சிறந்த பொழுது போக்குப் படம் எப்படி இருக்க வேண்டும்? ரஜினி சார் படம் மாதிரிதான் இருக்க வேண்டும். அதில் எந்த இரண்டாவது கருத்துக்கும் இடமில்லை.சாருடைய படங்களில் எனக்குப் பிடித்த அம்சம்... சண்டைக் காட்சிகளைக் கூட பாலிஷாக வைக்கச் சொல்வார். ரத்தம் கொப்பளிக்க, வன்முறை தாண்டவமாடுவது போன்ற காட்சிகள் அவருக்குப் பிடிக்காது. காரணம் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால்தான்.சண்டைக் காட்சிகள் தொழில் நுட்பத்துடன், தரமாக இருக்கலாம். ஆனால் அருவருக்கத்தக்கதாக இருக்கக் கூடாது என்ற அவரது எண்ணத்தைத்தான் நான் இயக்கும் படத்திலும் பின்பற்றப்போகிறேன்.காரணம் ரஜினி சார் ஒரு விஷயம் சொன்னால் அதில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும்... பயன்கள் அதற்கு மேலேயே இருக்கும்!

Wednesday, December 3, 2008

தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!


தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில், அவர் படங்களை வைத்துச் சம்பாதிக்கும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அமைதி காத்தாலும், ராஜ், விஜய் போன்ற தொலைக்காட்சிகள் மட்டும் எப்போதுமே ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவது வழக்கம்.இந்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ராஜ் டிவி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.டிசம்பர் மாதம் முழுக்க தினமும் சூப்பர் ஸ்டாரின் படங்களை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. நான் மகான் அல்ல, தர்ம துரை போன்ற அதிரடிப் படங்கள் இதில் இடம் பெறுகின்றன. தினசரி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் படங்கள் ஒளிபரப்பாகும். அதுமட்டுமல்ல, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ரஜினி குறித்து பிரபலங்களின் பேட்டிகள், ரசிகர் மன்றங்களின் ஆக்கப்பூர்வ கொண்டாட்டங்கள் என பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் காயம் பட்டு துன்புறும் வேளையில் தன் பிறந்த நாளைக் கொண்டாடாமல் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என ரஜினி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பலவேறு ரசிகர் மன்றங்களும் ரத்த தான முகாம், இலவச நல உதவித் திட்டங்கள், இலங்கை மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் உண்ணாவிரதக் கூட்டம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Tuesday, December 2, 2008

ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா


ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா


ஒரே சமயத்தில் டேனியல் கிரேக் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?இப்படியொரு கேள்வி முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் அளித்த பதில் இது:நான் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைத்தான் தேர்வு செய்வேன்!தமிழில் ஒரே படம்தான் நடித்துள்ளார் ப்ரியங்கா. அந்த படமே, இனி தமிழில் நடிக்க வேண்டாம் எண்ணத்தைக் கொடுத்துவிட்டது அவருக்கு. இதை அவரே ஒருமுறை விமன்ஸ் ஈராவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடிருந்தார்.இன்றைக்கு ஐஸ்வர்யா ராய்க்கு இணையாக பாலிவுட்டில் கொடி கட்டிப் பறப்பவர் ப்ரியங்கா.இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் சொன்னபோது, நமது நண்பர் இந்தக் கேள்வியை வீசினார்.ஒரே நேரத்தில் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் க்ரேக்குடன் நடிக்க வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?அடுத்து, ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை ப்ரியங்கா.'நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதையே விரும்புகிறேன். எனக்கு ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் தேவையில்லை', என்றார் பட்டென்று!'அதற்காக டேனியல் கிரேக் நல்ல நடிகர் அல்ல என நினைக்கத் தேவையில்லை. அவரும் நல்ல நடிகர்தான். ஆனால் ரஜினி சார் சம்திங் ஸ்பெஷல்...'என்றார் தொடர்ந்து.ஏற்கெனவே ஒரு உலக அழகி நமது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்ததிலிருந்து அவர் புகழைப் பாடி வருகிறார் (அதாவது உண்மையை!). இப்போது அவருடன் இன்னொரு உலக அழகியும் இணைந்துள்ளார்!தாய்க்குலத்தின் சாய்ஸ் எப்பவுமே தலைவர்தான்!

Monday, December 1, 2008

ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்


ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்


அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன் ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே. பீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு அறிமுகம் செய்கிறார். ரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்' என்பேன். அதற்கு அவர், "ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன் 'சார்' போடுகிறீர்கள்?" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார். "சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்" என்றேன். இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான் வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. 'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு. அப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர். ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன் வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி, படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது. "டைட்டிலில் ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும்" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும் கொள்ளச் செய்தது. 'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது. கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என் தவறை உணர்ந்தேன். முதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று அறியும் போது ஆவேசத்துடன், "நீ சுட்டு விரலைக் காட்டினப்ப நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்" என்று சொல்வார். நான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக் காண்பித்த போது, "இப்படிச் செய்தால் சிவாஜி சார் மாதிரி இருக்குமே" என்றார். நான் அதற்கு "உங்களது வசனம் பேசும் வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது" என்றேன். அதை ரஜினி ஒத்துக் கொண்டார். படத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக் கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது) அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார். அடுத்து 'தர்மயுத்தம்'. நான் கதை, வசனம் எழுதிய முதல் படம். ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அவரால் படப்பிடிப்பில் எந்தப் பிரச்னையுமில்லை. படத்தில் பௌர்ணமியன்று ரஜினியைக் கட்டிப் போடுவார்கள். அப்போது அவர் அலறுவார். அது போல் ஒரு காட்சி அடையாறு ஆலமரம் பகுதியில் படமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தயாராக இருந்தபோது ரஜினி வரவில்லை. ரஜினி பிரச்னையில் பாதிக்கப்பட்ட நேரம் அது. படப்பிடிப்பு தொடங்கிய வீடு திருமதி. ரெஜினா வின்சென்ட் என்பவருக்குச் சொந்தமானது. ரஜினி அவர்மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அவரைத் தன் தாயாகவே நேசித்தார். ரஜினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமானபின், முதலில் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'தர்மயுத்தம்'. அதற்கு முன் 'நமக்கு இது முதல் படம். அவர் குணமாகி வருவாரோ, மாட்டாரோ' என்று நான் மட்டுமின்றி, தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் சஞ்சலத்தில் இருந்தார்.ரஜினி படப்பிடிப்புக்கு வந்தபின் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் உதறல் இருந்தது. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று கற்பனையில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ரஜினியிடம் 'ரீ டேக்'கிற்கு கூட தயங்கினார்கள். ஒரு சமயம் டைரக்டர் ஆர்.சி.சக்திக்கு இன்னொரு டேக் தேவைப்பட்டது. அவர் ரஜினியிடம் கேட்கத் தயங்கினார். என்னைத் தூண்டிவிட்டார். நான் ரஜினியிடம் மெதுவாகச் சென்று வேறு விஷயங்களைப் பற்றி பேச்சுக் கொடுத்து கடைசியில் "ஒண்ணுமில்ல. இன்னொரு டேக் எடுத்தா நல்லதுன்னு படுது" என்றேன். "அதனாலென்ன நடிக்கிறேனே" என்றார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவு ரஜினியிடம் உரிமையோடு வேலை வாங்க முடியவில்லை. சண்டைக் காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று அபிப்ராயப்பட்டோம். இதே எண்ணம் ரஜினிக்கும் இருந்தது. படம் முடிந்தபின், "நான் நல்ல நிலையில் இருந்திருந்தால் இன்னும் சரியாகச் செய்திருப்பேனோ?" என்று வருந்தினார். இந்த வருத்தம் ரஜினிக்கு எப்போதும் உண்டு. ஆனாலும் அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது எல்லோருக்குமே மகிழ்ச்சி. மகேந்திரன் இயக்கிய ஜானியில் ஒரு கதாசிரியர் என்ற முறையில் ஸ்டோரி டிஸ்கஷனில் மட்டுமின்றி, படப்பிடிப்பிலும் கலந்து கொள்வேன். 'ஜானி' படத்திற்காக ஊட்டியில் ரஜினி ஓடிய ஓட்டம் இருக்கிறதே, எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கு பார்க்காமல் ஓடியிருக்கிறார். அதற்கு ஒலிம்பிக்கில் ஓடியிருந்தாலும் ரஜினி முதல் பரிசு வாங்கியிருப்பார். ஜானி போலீஸ?க்கு பயந்து ஓடிய பின், பார்பர் வித்யாசாகர் (இதுவும் ரஜினி) ஸ்ரீதேவியிடம் வருவார். ஜானியைப் போல் நடித்து கடைசியில் 'நான் வித்யாசாகர்' என்று அறிமுகம் செய்து கொள்வார். அந்தக் காட்சி முடிந்தபின் ஸ்ரீதேவியின் நடிப்பைப் பற்றி சுமார் அரை மணி நேரம் புகழ்ந்து பேசி மகிழ்ந்தார். "என்ன நடிப்பு..... என்ன நடிப்பு...." என்று ஸ்ரீதேவியை அப்படிப் பாராட்டினார் என்றால், படத்திற்காக டப்பிங் பேசுகையில், வித்யாசாகர் வேடத்தைப் பார்த்துவிட்டு, "அட என்னம்மா நடிக்கிறார் பாருங்க' என்று தன் கேரக்டரையே அவர் ரசித்தபோது, அதைப் பார்த்து நான் ரசித்தேன். 'ஜானி' படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது சில தினங்கள் தொடர்ந்து நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் காலையில் 5 மணிக்கு டப்பிங் வைத்துக் கொள்வார். 7 மணிக்கு அல்லது பாலச்சந்தர் எப்போது அழைத்தாலும் 'தில்லு முல்லு' படப்பிடிப்பிற்குச் செல்வார். அங்கு சென்று வந்தபின் மாலையில் மீண்டும் 'ஜானி' படப்பிடிப்பு. இதற்காக ரஜினியைப் புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டிற்கு நள்ளிரவில் கொண்டு விடுவது, திரும்ப அதிகாலையில் அழைப்பது எல்லாம் வீட்டுக்காரர்களுக்குச் சிரமமாக இருக்குமென்று, தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஒரு ஏற்பாடு செய்தார். 'ஜானி' படம் முடியும் வரை பாம்குரோவ் ஓட்டலில் ரஜினிக்கு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டது. நள்ளிரவு 2 அல்லது 3 மணிக்குத் திரும்பும் ரஜினி உடைகளை, ஷ?வைக் கூடக் கழற்றாமல் அப்படியே காலை விரித்துக் கொண்டு அசந்து தூங்குவார். தன்னை எழுப்ப வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக கதவைத் திறந்தே வைத்திருப்பார். நான் 4.45க்கு சென்று நிற்பேன். ஒரு நிமிடம் கூட அதிகமாகாது. நான் எழுப்பாமலே எழுந்து நிற்பார் ரஜினி. அது எப்படி என்று ஆச்சர்யப்படுவேன். எழுந்ததும் அவரது உடைகளைக் கழற்ற நானும் உதவுவேன். "என்ன பீட்டர் சார், உங்களுக்கேன் இந்த வேலை?" என்று சங்கடப்படுவார். "உங்க சகோதரனா இருந்து நான் செய்யக் கூடாதா?" என்று கேட்டதும் நெகிழ்ந்து போவார். "ஒரு பதினைந்து நிமிடம் ஷேவிங், குளியல், கடவுளைத் தியானித்தல், இது முடிந்து 5 மணிக்கெல்லாம் ரெடியாகி விடுவேன்" என்பார். சொன்னது போலவே ஷேவிங், குளியல், ராகவேந்திரரை வணங்கிவிட்டு தயாராக நிற்பார். அப்படி ஒரு அசாத்திய வேகம் மட்டுமின்றி, கடுமையான உழைப்பும் அவருக்கே உரித்தானது."