Thursday, October 30, 2008

ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!


மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு... போன்ற தலைவர்கள் களத்தில் நேரடியாக இறங்கி போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு பகிரங்கமாக ஆதரித்து களத்தில் இறங்காவிட்டாலும், மானசீகமாக ஆதரவளித்தவர்கள் ஏராளம். இவர்களிடமிருந்து மாறுபட்ட வேறுவழிகளில் தங்கள் சுதந்திர உணர்வைக் காட்டிய தலைவர்களும் உண்டு.அதனால் அவர்கள் தேச விரோதிகாளாகச் சித்தரிக்கப்பட்டார்களா... அல்லது கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும் இல்லையென்று ஆகிவிட்டதா...-இந்தக் கேள்வியை வாசகர் ஒருவர் கமெண்டாக எழுதியிருந்தார் ஒரு இணையதளத்தில், ராமேஸ்வரம் போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்கள் குறித்த (குறிப்பாக ரஜினி, கமல்) பாரதிராஜாவின் பேட்டிக்கு.இந்தக் கருத்தில் உள்ள உண்மைகளை ஏதோ நமது வசதிக்காக மட்டும் நியாயப்படுத்தாமல், எல்லாருக்கும் பொதுவாக வைத்து அலசிப் பாருங்கள்.ராமேஸ்வரம் போராட்டத்தில் ரஜினியும் கமலும் இதர நடிகர்களும் பங்கேற்கவில்லை. இதனால் அவர்கள் தமிழ் உணர்வு அற்றவர்கள் என்று முடிவு செய்துவிட முடியுமா... எந்த ஒரு பிரச்சினை குறித்தும் இன்னார் இப்படித்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. ராமேஸ்வரத்துக்குப் போய் போராட்டம் நடத்துவதில் தெரியும் உணர்வு, சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் மட்டும் இலலாமல் போய்விடுமா...இலங்கைத் தமிழர் பாதிக்கப்படுவதற்கான கண்டனங்களைப் பதிவு செய்யும் கலைஞர்களுக்கு ஆதரவாக ரஜினி ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே என பாரதிராஜா கோபப்பட்டிருந்தார்.பாரதிராஜாவின் கோபத்திலுள்ள நியாயத்துக்கு இணையான நியாயம் ரஜினியின் அமைதியிலும் இருக்கலாமல்லவா...இதை பாரதிராஜா உணர்வுப்பூர்வமாக பார்க்கிறார். ஆனால் ரஜினி போன்றவர்கள் அப்படி உணர்ச்சிவசப்பட்டு சர்வதேச பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துவிட முடியாது.ராமேஸ்வரம் பிரச்சினையில் பங்கு கொண்ட கலைஞர்கள் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் எல்லை மீறிப் பேசினார்கள். அந்த மாதிரி கொந்தளிப்பான ஒரு கூட்டத்தில் யாரும் யாரையும் அடக்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படியொரு சூழலில் யார் யாரோ முறை தவறிப் பேசுபவற்றுக்கு ரஜினி போன்றவர்கள் அல்லவா விளக்கம் சொல்ல வேண்டிவரும்!இன்னொன்று, இலங்கைப் பிரச்சினைதான் என்றில்லை... திரையுலகினர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ரஜினி எப்போதும் நடுநிலையாகவே நடந்து கொண்டுள்ளார். கடைசியாக நடந்த ஒகேனக்கல் உண்ணாவிரதப் பேராட்டத்தின் போது கூட உதைக்க வேண்டாமா? என்று அவர் கூறியது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பயன்படுத்திய ஒரு வார்த்தைதான்.ஆனால் அதற்கே அவரைக் கூண்டிலேற்றிவிட்டார்கள். ஆனால் ‘கன்னடக்காரன் மனைவியரையும்’ இதில் இழுத்து ஆபாசமாகப் பேசிய நபர்களுக்கு தமிழுணர்வாளர் என்று பட்டமளித்து கவுரவித்துவிட்டனர் நம்மவர்கள்.ரஜினி போன்றவர்களை வரவிடாமல் தடுப்பது இபடிப்பட்ட செயல்கள்தான். மற்றபடி அவருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அக்கறையுண்டு. தனது எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர் அதை பகிரங்கமாகச் சொல்லத் தயங்கியதில்லை.‘தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நிலை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கர்நாடகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இலங்கையில் துன்பப்படுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி.. இன்னும் உலகில் எஙஅகெல்லாம் தமிழர்கள் பரவியிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நடைபெறும் எந்த செயல்களும் கண்டிக்கத்தக்கவையே...”, இது முன்பு ஒருமுறை ரஜினி அளித்த பத்திரிகைப் பேட்டி.கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் எப்பவும் திரும்ப வாங்க மாட்டேன் (இது அவரோட சினிமா வசனம் இல்லை... 1996 தேர்தலின் போது அவர் பிரயோகித்த சொந்த வசனம்தான்...) என்பது ரஜினியின் கொள்கை. இலங்கைத் தமிழர் விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக எப்போதோ காட்டிவிட்டார் ரஜினி.இப்போதும் அவசியமேற்பட்டால் இலங்கைத் தமிழர் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தத் தயாராகவே உள்ளார். அதனால்தான் தன்னை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட நடிகர் சங்கம் மீண்டும் அழைத்தபோதும் மறுக்காமல் உண்ணாவிரதத்துக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினி.எனவே தேவையில்லாமல் அவரையும் அவரைச் சார்நத சமூகத்தையும் சீண்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அடுத்த கட்டப் பணிகளைப் பாருங்கள்.

Wednesday, October 29, 2008

ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!


ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!இந்த வழக்குச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் அனுபவப்பட்டுமிருப்பீர்கள்.அதற்கு இப்போதைய உதாரணம் சத்யராஜ்.‘இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு எதுக்காக எழுதறீங்க...’ என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் இன்றைய சபைகளில் யோக்கியனின் குரல் எடுபடுவதில்லை. நிஜத்திலும் பிரமாதமாக நடிப்பவர்தான் இன்றைக்கு புரட்சித் தமிழன்களாக... இன முரசுகளாக உலா வர முடியும்.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்களைப் பற்றியும்,. இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் பற்றியும் நீண்ட நாள் கழித்து இப்போது திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் சத்யராஜ்: ]“...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி இருந்தது. அதைவிட்டுவிட்டு போக முடியாத சூழல்..!இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.கலைஞரின் இந்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்...”- தமிழுணர்வெல்லாம் சரிதான். இவர் சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்று சாதாரண ரசிகனுக்கே புரியும்போது ரஜினி ரசிகர்களான நமக்குப் புரியாதா...ஆனால் எந்த அடிப்படையில், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழகத்திலிருக்கவே லாயக்கற்றவர்கள் என்று சொல்கிறார் சத்யராஜ்?ராமேஸ்வரம் போராட்டத்தின்போது இவருக்கு எப்படி இவரது வீட்டு விசேஷம் முக்கியமாக இருந்ததோ, அதேமாதிரியான விசேஷங்கள் மற்றவர்களுக்கும் இருக்காதா... அல்லது இவர் ஒருவருக்குத்தான் குடும்பமே இருக்கிறதா...?ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் தமிழர்களே அல்ல என்றார் பாரதிராஜா. அப்படியெனில் அது இவருக்கும் பொருந்தும் அல்லவா!அடுத்து இவர் எத்தனைப் பெரிய பொய்யர் என்பதற்கு ஒரு உதாரணம் இந்தப் பேச்சு. இவர் வீட்டு விசேஷம் என்று சொன்னதெல்லாம் சும்மா... இவருக்கு அன்றைய தினம் பாங்காக்கில் படப்பிடிப்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு இவரே தகவல் அனுப்பியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் எதையும் தீர்மானிக்கிற சக்தியாக இல்லாத இவருக்கே இவ்வளவு என்றால், ஒரு மொழியின் திரைத்துறையையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழும் ரஜினிக்கு எத்தனை முக்கிய பணிகள் இருக்கும்... அவர் மட்டும் அவற்றையெல்லாம் கவனிக்காமல் கூப்பிட்டவுடன் ஓடி வந்துவிட வேண்டுமா...?இவரைப் போன்ற ஆசாமிகள் பேச்சுக்கெல்லாம் மீடியா தருகிற முக்கியத்துவம்தான் மைக் கிடைத்தவுடன் இவர்களை கண்டபடி உளற வைக்கிறது.ஆனால் ஒன்று...ரஜினி வேண்டுமானால் பெருந்தன்மையுடன் இந்த மாதிரி அனாசாரங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லா நேரத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. படையப்பாவின் ஆறாவது முகமான அவரது ரசிகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கினால்... என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே, நொந்துடுவ!

Tuesday, October 28, 2008

எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..


அஜீத்-அறிமுகம் தேவையில்லாத முன்னணி நடிகர். தலைவருக்குப் பிறகு மெகா ஓப்பனிங் உள்ள நடிகர் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெயரெடுத்துள்ளவர். எப்போதும் சர்ச்சை நாயகனாகத் தெரிந்தவர்... இப்போது சாந்த நாயகனாக மாறியிருப்பவர். Rajinifans.com என்றதும் கையை ஒருகணம் இறுகப் பற்றியவர், ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க பாஸ் என்று கூறிவிட்டு, வந்திருந்தவர்களுடன் அவசர அவசரமாகப் போட்டோ செஷன் முடித்துவிட்டு வந்தார். நமக்காக அஜீத் ஒதுக்கியது 10 நிமிடங்கள். அதில் ஒன்பதரை நிமிடங்கள் அவர் பேசியது தலைவர் ரஜினியைப் பற்றி!ரஜினியைப் பற்றி பேசும்போது அவர் குறிப்பிடுவது இரண்டு வார்த்தைகளைத்தான்... தலைவர் அல்லது சார்...அவரது வாழ்க்கையின் திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது...? ரஜினி என்ற மந்திரம் அவருக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியது?இனி அஜீத் பேசுகிறார்...அடிப்படையில் நான் தலைவரின் ரசிகன். அவரைப் பார்த்து, அவரைப் போலவே வரவேண்டும் என்ற ஆசையோடு வந்தவன். நான் நடித்த படங்களில் என்னால் முடிந்த வரை, ஒரு ரஜினி ரசிகனாக அவர் புகழ் பாடியிருக்கிறேன். அடிப்படையில் உங்களைப் போன்றே மிகத் தீவிரமாக அவரை ரசித்து மகிழும் ரசிகன் நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இடையில் நான் பேசியவை, அவை எந்த மாதிரி வடிவம் பெற்று மீடியாவில் வந்தன என்பதெல்லாம் எல்லோரையும்விட சாருக்கு நன்கு தெரியும்.ஆனால், முன்பெல்லாம் நானாக அவரிடம் இதுபற்றிப் பேசினாலும் கூட அவர் தவிர்த்துவிடுவார். ‘விடுங்க... நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. கொஞ்சமா பேசுங்க... நிறைய செய்ங்க. அப்புறம், நீங்க பேசாவிட்டாலும் இவர்கள் அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்’ என்றார். எத்தனை சத்தியமான, அனுபவப்பூர்வமான வார்த்தைகள் பாருங்கள்!அவர் எனக்கு தி ஹிமாலயன் மாஸ்டர் புத்தகம் கொடுத்தார். ஒரு குருவைப் போல அது எனக்கு வழிகாட்டும் என்றார். எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன், எப்போதும் சொல்வேன். ரஜினி சாரின் ரசிகர்களுக்கு இதைச் சொல்லுங்கள், ப்ளீஸ்...பில்லாவில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்த பிறகு எத்தனை விதமாக அதைக் கெடுக்க நினைத்தார்கள் தெரியுமா... ஆனால் அப்போதெல்லாம், சாருடைய ஆதரவுதான் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. அந்தப் படம் துவங்கியதிலிருந்து, ரிலீஸ் வரை அனைத்திலும் ரஜினி சாரின் நேரடிப் பார்வை இருந்தது. யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது என்றுதான் சொல்வேன்.இதோ.. ஏகன் ரிலீஸ். மிகுந்த சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். நிறைவாக இருக்கிறது. இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டார் தலைவர்.தலைவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம், எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்பது. அவரைப் பாருங்கள்... யாரிடமாவது தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் பழகியிருப்பாரா... பேசியிருப்பாரா...! அவரே அப்படியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு பாஸ்!!அவரது ரசிகன் என்று சொல்லிக் கொள்வது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.நான் அமைதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்... உண்மைதான். எதற்கு அவசரப்பட வேண்டும். கிடைப்பது நிச்சயம் எனக்குக் கிடைத்தே தீரும் என்ற தலைவரின் வார்த்தைகளை நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நான் பெறும் வரையில்தான் அமைதியற்ற மனநிலையில் இருந்தேன்..., என்ற அஜீத், ஒரு புன்முறுவலுடன் விடை கொடுத்தார்.

Saturday, October 25, 2008

சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!


சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
(Saturday, 25th October 2008)
ரஜினியின் தயவில் இந்த ஆண்டும் சன் டிவிக்கு அமர்க்கள தீபாவளியாக விடிகிறது.சூப்பர் ஸ்டாரின் சாதனைப் படம் சந்திரமுகியை தீபாவளி சிறப்புத் திரைப்படமாக அக்டோபர் 27-ம் தேதி ஒளிபரப்புகிறது சன் டிவி.சந்திரமுகியின் சாதனை உலகமறிந்தது. ரஜினியின் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம், அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடிய படம், விநியோகஸ்தர்கள் ஷேர் என்ற வகையில அதிக லாபம் சந்பாதித்துக் கொடுத்து, அந்த சாதனையை இதுவரை எந்தப் படமும் தொட முடியாத உயரத்தில் உள்ள படம்.சந்திரமுகியை மிகப்பெரிய விலைக்கு சன் டிவி வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக விளம்பரதாரர் வருவாயுடன் ஒளிபரப்பப் போகிறது.ரஜினியின் பாட்ஷா என்ற ஒரு படத்தின் மூலம் சன் சம்பாதித்த தொகை அந்தப் படத்தை வாங்கிய விலையை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் சன்னில் பணியாற்றும் நமது நண்பர்கள்!அதிக விலைக் கொடுத்து வாங்கினார்கள், இப்பேது அந்த ரிஸ்க் எடுத்த்தற்கு பலனாக நல்ல லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் உங்களுக்கென்ன வந்தது என சிலர் கேட்கக் கூடும். வியாபாரத்தில் சென்டிமெண்ட் பார்க்கக் கூடாதுதான்.ஆனால் சிவாஜி, குசேலனை தங்களுக்குத் தராத கோபத்தில் சன் நிகழ்த்திய கோயபல்ஸ் பிரச்சாரம் இருக்கிறதே... சகிக்க முடியாத, மனிதத்தன்மையற்ற செயல் அது. அது என்ன வகை வியாபார தர்மம்?தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரேயடியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், அவரே வேண்டாதவராகிவிட்டால், ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க முயல்வதும் சன் குழும நியாயங்கள்.ரஜினி படங்களை ஒளிபரப்புவதற்கான வர்த்தக உரிமை வேண்டுமானால் சன்னுக்கு இருக்கலாம். ஆனால் தார்மீக உரிமை கிடையவே கிடையாது!