
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!இந்த வழக்குச் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பல நேரங்களில் அனுபவப்பட்டுமிருப்பீர்கள்.அதற்கு இப்போதைய உதாரணம் சத்யராஜ்.‘இவரெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சு எதுக்காக எழுதறீங்க...’ என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் இன்றைய சபைகளில் யோக்கியனின் குரல் எடுபடுவதில்லை. நிஜத்திலும் பிரமாதமாக நடிப்பவர்தான் இன்றைக்கு புரட்சித் தமிழன்களாக... இன முரசுகளாக உலா வர முடியும்.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்களைப் பற்றியும்,. இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் பற்றியும் நீண்ட நாள் கழித்து இப்போது திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் சத்யராஜ்: ]“...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சி இருந்தது. அதைவிட்டுவிட்டு போக முடியாத சூழல்..!இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.கலைஞரின் இந்த அறவழிப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்...”- தமிழுணர்வெல்லாம் சரிதான். இவர் சுற்றி வளைத்து எங்கே வருகிறார் என்று சாதாரண ரசிகனுக்கே புரியும்போது ரஜினி ரசிகர்களான நமக்குப் புரியாதா...ஆனால் எந்த அடிப்படையில், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழகத்திலிருக்கவே லாயக்கற்றவர்கள் என்று சொல்கிறார் சத்யராஜ்?ராமேஸ்வரம் போராட்டத்தின்போது இவருக்கு எப்படி இவரது வீட்டு விசேஷம் முக்கியமாக இருந்ததோ, அதேமாதிரியான விசேஷங்கள் மற்றவர்களுக்கும் இருக்காதா... அல்லது இவர் ஒருவருக்குத்தான் குடும்பமே இருக்கிறதா...?ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத நடிகர்கள் தமிழர்களே அல்ல என்றார் பாரதிராஜா. அப்படியெனில் அது இவருக்கும் பொருந்தும் அல்லவா!அடுத்து இவர் எத்தனைப் பெரிய பொய்யர் என்பதற்கு ஒரு உதாரணம் இந்தப் பேச்சு. இவர் வீட்டு விசேஷம் என்று சொன்னதெல்லாம் சும்மா... இவருக்கு அன்றைய தினம் பாங்காக்கில் படப்பிடிப்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு இவரே தகவல் அனுப்பியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் எதையும் தீர்மானிக்கிற சக்தியாக இல்லாத இவருக்கே இவ்வளவு என்றால், ஒரு மொழியின் திரைத்துறையையே தீர்மானிக்கிற சக்தியாகத் திகழும் ரஜினிக்கு எத்தனை முக்கிய பணிகள் இருக்கும்... அவர் மட்டும் அவற்றையெல்லாம் கவனிக்காமல் கூப்பிட்டவுடன் ஓடி வந்துவிட வேண்டுமா...?இவரைப் போன்ற ஆசாமிகள் பேச்சுக்கெல்லாம் மீடியா தருகிற முக்கியத்துவம்தான் மைக் கிடைத்தவுடன் இவர்களை கண்டபடி உளற வைக்கிறது.ஆனால் ஒன்று...ரஜினி வேண்டுமானால் பெருந்தன்மையுடன் இந்த மாதிரி அனாசாரங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம். ஆனால் அவரது ரசிகர்கள் எல்லா நேரத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. படையப்பாவின் ஆறாவது முகமான அவரது ரசிகர்கள் தங்கள் நிஜ முகத்தைக் காட்டத் துவங்கினால்... என்னம்மா கண்ணு... தாங்க மாட்டே, நொந்துடுவ!
No comments:
Post a Comment